திருக்குறள்

1262.

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.

திருக்குறள் 1262

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.

பொருள்:

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

மு.வரததாசனார் உரை:

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.